திண்டுக்கல் மாவட்டம்
பழனி முருகன் கோவிலில் சித்திரை முதல் நாளில் சுவாமி தரிசனம் செய்ய பழனியில் பக்தர்கள் குவிந்தனர். மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில், படிபாதை, ரோப்கார் மற்றும் வின்ச் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மலை மீது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர். ரூ. 200 கட்டண வழியில் மூன்று மணி நேரம், பொது தரிசன வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.