ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

63பார்த்தது
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு கல்வி செம்மல் விருது வழங்கும் விழா தமிழக ஆசிரியர் கூட்டணியின் 41வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை காலை 11: 30 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் முருகேசன், தலைமை நிலைய செயலாளர் சகாய தொபியாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் தனபால் ஆண்டறிக்கை வாசித்தார். ரெட்டியார்சத்திரம் வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வி உமாராணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஜான் பீட்டர், ஆர்தர் மற்றும் சிகாமணி ஆகியோர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்.

25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கல்வி செம்மல் விருதுகளை வழங்கி மாநில பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐபெட்டோ பொதுச் செயலாளர் அண்ணாமலை பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பொன்னாடைகள் போர்த்தி பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முன்னதாக ரெட்டியார்சத்திரம் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் பசுங்கிளி வரவேற்புரை ஆற்றினார். ஜெஸ்ஸி சுகுணா திலகவதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி