வழக்கறிஞர் சங்கம் சார்பாக போராட்டம்

81பார்த்தது
வழக்கறிஞர் சங்கம் சார்பாக போராட்டம்
திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயிலில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி, இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுப்பினர். வழக்கறிஞர்கள் போராட்டத்தால் கோர்ட் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. வழக்கிற்கு வந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

தொடர்புடைய செய்தி