வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது

71பார்த்தது
பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ பி செந்தில்குமார் தலைமையில் திண்டுக்கல் பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தை பாராட்டி அயல்நாடான கனடாவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி அரசின் திட்டத்தை எந்த நாடுகளும் இதுவரை பாராட்டவும் இல்லை பின்பற்றவும் இல்லை என ஐ பி செந்தில்குமார் தெரிவித்தார். பின்னர் காந்தி மார்க்கெட் பகுதியில் துவங்கப்பட்ட இருசக்கர வாகன பேரணி பழனி பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை பழனியாண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி