பழனி அடிவாரம் பகுதியில் நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி அடிவாரம் பகுதியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை 11. 30 மணியளவில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோடை வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நீர்மோர் வழங்கியும்,
தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
கோடை காலம் முழுவதும் நகரின் பல இடங்களில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கவும், தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கவும் சூர்யா ரசிகர் மன்றத்தினர் திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பழனி சூர்யா நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.