சமூக ஆர்வலரும், சர்வோதயா மற்றும் சிப்கோ இயக்கத்தின் தலைவருமான முராரி லால் (91) காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து முராரி லால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். முராரி லால் 1933 இல் சாமோலி மாவட்டத்தில் கோபேஷ்வர் அருகே உள்ள பாப்டியானா கிராமத்தில் பிறந்தார். சிப்கோ இயக்கத்தின் தாய் அமைப்பான தசோலி கிராம சுயராஜ்ய மண்டலத்தின் தலைவராக முராரி லால் பணியாற்றினார்.