மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

3277பார்த்தது
தாண்டிக்குடி அருகே புல்லாவெளி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே புல்லா வெளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பாரதிராஜா வயது 38. இவர் தேன் எடுக்கும் தொழிலாளி. புதன்கிழமை காலை 9 மணி அளவில் நண்பருடன் தேன் எடுக்க அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். 200 அடி உயரம் உள்ள இலவம்பஞ்சு மரத்தில் ஏறி தேன் எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து பாரதிராஜா கீழே விழுந்தார். இதில் கை கால் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.

இதனை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவிற்கு சசிக்கலா என்ற மனைவியும் 17 வயது மகளும் 14 வயது மகனும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி