திருமலைக்கேணியில் சஷ்டி பூஜை

62பார்த்தது
திருமலைக்கேணியில் சஷ்டி பூஜை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத சஷ்டி பூஜை விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும் தீபாராதனைகளும், நடந்தது. அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் விசேஷ பூஜைகள் நடந்தது. இதைப் போலவே நத்தம் கோவில் பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் பூஜைகள் மட்டும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி