டூ வீலரில் தவறி விழுந்த தொழிலாளி பலி

2232பார்த்தது
செந்துறை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.

செந்துரையைச் சேர்ந்தவர் முருகன் வயது 56 கூலித் தொழிலாளி இவர் செந்துறையில் இருந்து மங்களப்பட்டிக்கு வேலை தேடி பெரியூர் பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். மங்களப்பட்டி பிரிவு பகுதியில் பைக் சென்று கொண்டிருந்தபோது பிரகாஷ் திடீரென பிரேக் போட்டார். இதில் எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்த முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை மதியம் 12: 30 மணி அளவில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி