திண்டுக்கல் ஒன்றியம் குரும்பபட்டி ஊராட்சி, மீனாட்சிநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் சரியான பேருந்து வசதி இல்லாததால், பள்ளி சென்று வர காலை, மாலை இருவேளைகளிலும் பேருந்து இயக்க கோரி பெற்றோர்களுடன் இணைந்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் பள்ளி துவங்கும் முதல் நாளான இன்று பள்ளிக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.