நத்தத்தில் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா

84பார்த்தது
நத்தத்தில் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ராஜகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

கடந்த 23-ஆம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு திருவிழா தொடங்கியது. அன்று இரவு அம்மன் குளத்தில் இருந்து கரகம் ஊர்வலமாக வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, முளைப்பாரி, கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் வியாழக்கிழமை இரவு கரகம் அம்மன்குளம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி