தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாமக வேட்பாளர்

84பார்த்தது
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் திலகபாமா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் பாஜக கூட்டணியின் வேட்பாளர் திலகபாமா அவர்கள் மாம்பழச் சின்னத்திற்கு வாக்கு கேட்டு கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தீவிரப் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியின் நகர பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் ஈடுபட்டார்.

பொது மக்களிடம் திலகபாமா அவர்களுக்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்தது. கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் பாமக வேட்பாளர் திலகபாமா அவர்கள் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜை நடைபெற்றது அதைத்தொடர்ந்து அப்சர்வேட்டரி, புதுக்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்தில் பாஜக, ஐஜேகே, அமமுக, ஓபிஎஸ் அணியினர் மற்றும் அனைத்து கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி