உலகக்கோப்பையை தொட்டு ரசித்த தோனி

59பார்த்தது
உலகக்கோப்பையை தொட்டு ரசித்த தோனி
ஒரு கேப்டனாக பெற்றுக் கொடுத்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டிராபியை எம்.எஸ்.தோனி தொட்டு பார்த்த அந்த மகிந்த அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையிலுள்ள பிசிசிஐயின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த 2011 உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்தார். 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. இந்த டிராபியை தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு தோனி மும்பையிலுள்ள பிசிசிஐ தலைமையகத்தில் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி