தோனியால் அதிர்ந்த மைதானம்! காதை மூடிக் கொண்ட வீரர்

53பார்த்தது
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் மோதியதில் ருத்துராஜ் கெய்க்வாட் படை வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் சத்தம் எழுப்பினர். இதன் காரணமாக பவுண்டரி லைனில் பீல்டிங் நின்ற ரசல் தனது காதுகளை மூடிக்கொண்டார். போட்டிக்கு பின்னர் தனது இன்ஸ்டாவில், தோனி, உலகில் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி