கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்

54பார்த்தது
கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்
திருப்பூர் குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் (22) என்ற பெண்ணிற்கு நேற்று (ஏப்ரல் 8) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கு சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள், அப்பெண்ணை தொட்டில் கட்டி சுமார் 7 கி.மீ., தூரம் வரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். சாலை வசதியின்றி மக்கள் நாள்தோறும் அவதிபட்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி