குழந்தை இல்லாததால் மனைவி அடித்துக் கொலை

553பார்த்தது
குழந்தை இல்லாததால் மனைவி அடித்துக் கொலை
மயிலாடுதுறை மாவட்டம் மாமாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கேசவன் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மது போதையில் இருந்த கேசவன் மனைவி மகாலட்சுமியை கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மகாலட்சுமி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மகாலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நேற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி