ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

53பார்த்தது
ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா
தருமபுரி பென்னாகரம் மூங்கில்மடுவு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நேற்று தனது குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், “தங்களது வீட்டிற்குச் செல்லும் புறம்புக்கு பாதையை ஒருவர் ஆக்கிரமித்துள்ளதால் வீட்டிற்குச் செல்ல பாதை இல்லை. இதனால், உடணடியாக அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். முன்னதாக ஆட்சியரிடம் இதுகுறித்து முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் தர்ணாவில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி