சென்னை தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

78பார்த்தது
சென்னை தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் மாலுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து உஷார் படுத்தப்பட்ட காவல்துறையினர் மோப்ப நாய்களை கொண்டு வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் எச்சரிக்கை காரணமாக தனியார் மால் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இதே போல் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி