பென்னாகரம்: கடை கடையாக சென்று நன்றி தெரிவித்த எம்எல்ஏ

82பார்த்தது
ஒகேனக்கல் காவிரி உபரீ நீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி அரை நாள் கடையடைப்பு போராட்டம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இதற்கு ஆதரவு அளிக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் வணிகர்களிடம் ஆதரவு கோரி நிலையில் பலரும் ஆதரவு அளித்தனர். இதனை அடுத்து அக்டோபர் 12 நேற்று மாலை பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி கே மணி மற்றும் நிர்வாகிகள் பென்னாகரம் பெரும்பாலை ஏரியூர், உள்ளிட்ட பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு நேரடியாக சென்று வணிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி