இரவில் வெளியான அறிவிப்பு.. திமுகவினர் கொண்டாட்டம்

68பார்த்தது
தருமபுரி மாவட்ட பொது மக்கள் மற்றும் விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்திட, சட்டப்பூர்வமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு அதற்கான அரசு அறிவிப்பு நேற்று அக்டோபர் 03 இரவு வெளியானது. இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரவு 9. 30 மணியளவில் தடங்கம் கிராமத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம். பெ. சுப்ரமணி Ex. MLA பட்டாசு வெடித்தும் , பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் பென்னாகரம் நெருப்பூர் ஏரியூர் பாப்பிரெட்டிப்பட்டி பாலக்கோடு அரூர் மொரப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகளை உடைத்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி