ஒகேனக்கல்லில் 13000 உடனடியாக நீர்வரத்து அதிகரித்து

51பார்த்தது
தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பொழிந்து வருவதால். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவு 7 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்து இன்று அதிகாலை வினாடிக்கு 13000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என வ எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லு க்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி