திமுக - பாமகவினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

3979பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பத்திரெட்டிஅள்ளியை சேர்ந்தவர் முருகன் (வயது37). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (45). இவர்கள் இருவரும் கடந்த 19-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரின் முகவர்களாக சென்றனர்.

அதே பகுதியைசேர்ந்த பழனிவேல் (48), பழனிசுந்தரம் (51) ஆகியோர் பாமக முகவர்களாக இருந்தனர். வாக்குப்பதிவு அன்று பாமக முகவர்கள் கள்ள ஓட்டு போட்டனர். இதை திமுக முகவர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதி கொண்டனர். இது குறித்து இருதரப்பினரும் பொம்மிடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் திமுக -பாமகவை சேர்ந்த 8 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி