கேரளாவின் கோழிக்கோடு அருகே வளர்ப்பு எருமை அதன் உரிமையாளரை முட்டிக் கொன்றது. எருமை தாக்குதலில் பனங்கோடு குளங்கரையைச் சேர்ந்த ஹசைனார் என்பவர் உயிரிழந்தார். நேற்று மாலை 4 மணியளவில் மேய்ச்சலில் இருந்து எருமை மாட்டை வீட்டிற்கு கொண்டு வந்தபோது இந்த சோகம் ஏற்பட்டது. வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சுவரை நோக்கி எருமை அவரை சரமாரியாக பலமுறை முட்டித் தள்ளியது.
எருமையை பிடித்த அப்பகுதி மக்கள், பலத்த காயமடைந்த ஹசைனாரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.