இருசக்கர வாகனத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

3295பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் காவல் நிலைய எல்லை மணியம்பாடி பகுதியில் கடத்தூரிலிருந்து மணியம்பாடி நோக்கி சென்ற இருசக்கர வாகனமும் மணியம்பாடியில் இருந்து கடத்தூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும் தர்மபுரி பொம்மிடி சாலையில் நேற்று (22.04.2024) இரவு 8: 30 மணி அளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற இருவர் படுகாயத்துடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்த கடத்தூர் காவல்துறையினர் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி