கூத்தாண்டவர் கோயில் இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி

80பார்த்தது
கூத்தாண்டவர் கோயில் இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூவாகம் கிராமத்தில், திருநங்கைகள் குலதெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு சித்திரை திருவிழாவானது 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23) திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி மாலை 4 மணிக்கு சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்தி