வாட்ஸ்அப் மூலம் தரிசன முன்பதிவு திட்டம் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் முறை குறித்து எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை. சைபர் குற்றவாளிகள் பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதை அடுத்து திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை புறக்கணிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.