போலி ரேஷன் கார்டுகளை தவிர்க்க மத்திய அரசு தற்போது e-KYC (Electronic Know Your Customer) முறையை கட்டாயமாக்கியுள்ளது. இது சரிபார்ப்பு செயல்முறையை சீரமைக்க மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க உதவுகிறது. e-KYC செயல்முறையை முடிக்க இரண்டு வழிகளை மத்திய அரசு வழங்குகிறது. மொபைல் ஒரு முறை கடவுச்சொல் (OTP) அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் இதனை முடிக்கலாம். இதனை வரும் சனிக்கிழமைக்குள் (பிப்.22) பயனாளிகள் முடிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்.