பாலக்கோடு: சமுதாய கூடத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

74பார்த்தது
பாலக்கோடு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கெண்டேன அள்ளி ஊராட்சி மற்றும் கிராமத்தில் முன்னாள் உயர்கல்வி & வேளாண் துறை அமைச்சர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே. பி. அன்பழகன் 80 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் இன்று அக்டோபர் 12 காலை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவை தலைவர் தொ. மு. நாகராசனார் பாலக்கோடு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோபால் பாலக்கோடு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில் மாரண்டஅள்ளி நகர கழக செயலாளர் V. கோவிந்தன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் புதூர் சுப்பிரமணி மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன் மாவட்ட பிரதிநிதி ராஜா ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ராமசாமி முன்னாள் தலைவர் மணிவண்ணன் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி