மாமியார் வீட்டை சேதப்படுத்திய போலீஸ்காரர் கைது

1861பார்த்தது
தர்மபுரி மாவட்டம் கோலம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40). அசாமில் ரைபில் படை பிரிவில் போலீஸ் காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

கருத்து வேறு பாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரூர் அருகே பாப்பநாயக்கன்வலசை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து செந்தில்குமார் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி, மாமியாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல், கதவுகளை உடைத்து சேதப்படுத் தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவருடைய மாமியார்வளர்மதி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி