கள்ளக்குறிச்சி - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

57பார்த்தது
கள்ளக்குறிச்சி - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஆறுமுகம் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரில் ஒரு பெண் உள்பட மேலும் 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கள்ளச்சாராயம் குடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கருணாபுரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.