பிரதமர் மோடியின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

1396பார்த்தது
பிரதமர் மோடியின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு
மேகாலயாவில் வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி மேற்கொள்ள இருந்த பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துராவில் உள்ள பி.ஏ.சங்மா விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பி.ஏ.சங்மா அரங்கில் பணிகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி மேகாலயா அரசு பிரசார கூட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது. பிஜேபி என்பிபி தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்தாலும், இரண்டுக்கும் இடையே தேர்தலுக்கு முன் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இரு அணிகளும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதுடன், பிரசாரத்தின் போது ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர்.