ரயில்கள் மோதிய விபத்து - பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

77பார்த்தது
ரயில்கள் மோதிய விபத்து - பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு
மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி துணைப்பிரிவின் கீழ் ரங்கபானி ரயில் நிலையத்திற்கு அருகில் ருய்தாசா என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில் இன்று (ஜூன் 17) கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மோதியது. இந்த கோர விபத்தின் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மேலும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி