மேற்கு வங்க ரயில் விபத்து - ரயில்வே அமைச்சர் பதிவு

74பார்த்தது
மேற்கு வங்க ரயில் விபத்து - ரயில்வே அமைச்சர் பதிவு
மேற்கு வங்கத்தில் இன்று (ஜூன் 17) விரைவு ரயில் மீது, சரக்கு ரயில் மோதிய விபத்தில் 5 பயணிகள் பலியாகி உள்ளனர். இந்த விபத்து குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி