உணவில் செத்து கிடந்த பாம்பு. மருத்துவமனையில் மாணவர்கள்.!

54பார்த்தது
உணவில் செத்து கிடந்த பாம்பு. மருத்துவமனையில் மாணவர்கள்.!
பீகாரில் அரசு பொறியியல் கல்லூரி மெஸ்ஸில் சமைக்கப்பட்ட உணவில் குட்டி பாம்பு ஒன்று செத்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு சரியில்லை என்று கடந்த காலங்களில் பலமுறை புகாரளித்தும் கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெஸ் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி