ரயில்கள் மோதிய விபத்தின் கோர காட்சிகள்

81பார்த்தது
மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி துணைப்பிரிவின் கீழ் ரங்கபானி நிலையத்திற்கு அருகில் ருய்தாசா என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில் இன்று (ஜூன் 17) சரக்கு ரயில் மீது காஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மோதியது. இதில், காஞ்சன்ஜங்கா ரயில் பயணிகள் காற்றில் வீசப்பட்டுள்ளனர். மேலும், அந்த ரயில் அந்தரத்தில் நின்றபடி உள்ளது. மேலும், சரக்கு ரயில் பெட்டிகள் தண்டவாளம் அருகே சிதறி விழுந்து கிடக்கின்றன. இந்த விபத்தில் 4 பேர் பலியான நிலையில் தற்போது விபத்து குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி