தாவூத் இப்ராஹிம் மரணம்?

1084பார்த்தது
தாவூத் இப்ராஹிம் மரணம்?
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மரணம் அடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் டிசம்பர் 15ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத நபரால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அண்மை தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 17ஆம் தேதி இரவு 8 மணியளவில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாவூத் இதுவரை தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் வாதிட்டு வருகிறது. அதனால் தாவூத் மரணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களில் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பகிரப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி