மழை வெள்ளத்திலும் விடாது சேவை செய்யும் டாஸ்மாக்

59539பார்த்தது
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் திரண்டு வழக்கம் போல மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். பாளையங்கோட்டை பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீர், இருசக்கர வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு தேங்கியுள்ளது. மக்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாத நிலையில் முடங்கி உள்ள போதிலும் டாஸ்மாக்கில் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி