தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்!

576பார்த்தது
தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்!
தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி