ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்

1067பார்த்தது
ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்
வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மழை பதிவாகியுள்ளது என தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் மாவட்டங்களில் றைந்தபட்சமாக 36 செ.மீ. மழை பெய்துள்ளது எனவும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் 68 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி