டானா புயல்: 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

66பார்த்தது
டானா புயல்: 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
'டானா' புயல் எச்சரிக்கையையொட்டி, ஒடிசா அரசு 14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 23 முதல் 25 வரை விடுமுறை அறிவித்துள்ளது. புயல் காரணமாக இப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நாளை அக்., 23ஆம் தேதி டானா என்ற தீவிர புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, 24ஆம் தேதி இரவு, 25ஆம் தேதி அதிகாலையில் கடக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி