கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை

72பார்த்தது
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
மத்திய அரசு 2023-24 அரவைப் பருவத்திற்கு அறிவித்துள்ள ஆதாய விலையை விட, ரூ.2,919.75 காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்புத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கப்படும். இதற்காக ரூ.247 கோடி நிதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.