சாலையோரம் கெமிக்கல் பேரல் வீசி சென்ற மர்ம நபர்கள்

2275பார்த்தது
திண்டிவனத்தில் புறவழிச் சாலை ஓரங்களில் மர்ம நபர்கள் வீசி சென்ற கெமிக்கல் பேரல்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அய்யன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள புதிய திருவண்ணாமலை புறவழிச் சாலை ஓரம் நேற்று நள்ளிரவு யாரோ சில மர்ம நபர்கள் கெமிக்கல் அடைக்கப்பட்ட பேரல்களை வீசி சென்றுள்ளனர். அந்த பேரல்களில் இருந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் பயங்கர நெடி வீசியதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து நெடியின் தன்மையை குறைக்க செய்தனர். இருப்பினும் அந்த பேரல்களில் இருந்து அப்பகுதி மக்கள் மூச்சு திணறல் ஏற்படும் அளவிற்கு தொடர்ந்து நெடி வீசி வருவதால் அங்கு வீசப்பட்டுள்ள பேரல்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி