சென்னை ஆளுநர் மாளிகையில் "எண்ணித் துணிக" என்ற தற்காப்பு கலை ஆசான்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாச்சாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜதுரைக்கு சிலம்ப செம்மல் விருதை தமிழக ஆளுநர் R N ரவி வழங்கினார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ராஜதுரையை பாராட்டி வருகின்றனர்.