கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் முகப்பு சாலை அருகில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.