கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வள்ளலார் சர்வதேச மையம் சம்மந்தமாக பார்வதிபுரம் கிராம மக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நேற்று இரவு அம்மன் கோயிலில் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் அதிகளவில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். இதில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்த உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.