வடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
ஒன்றிய மோடி அரசு அறிவித்துள்ள
அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கின்ற புதிய குற்றவியல் சட்டத்தை வாபஸ் வாங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வடலூர் நகர அமைப்பு குழு செயலாளர் ஆர் இளங்கோவன் தலைமையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி ஆறுமுகம் கட்சியின் வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் கே எம் குமரகுரு வழக்கறிஞர் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம் பி தண்டபாணி கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர் சிவகாமி ஆர் கே சரவணன் ஆகியோர் புதிய குற்றவியல் சட்டம் பற்றி மக்களின் பாதிப்பு குறித்து பேசினர். மற்றும் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி கிருஷ்ணமூர்த்தி பி அழகு முத்து குறிஞ்சிப்பாடி நகர அமைப்பு குழு செயலாளர் வி மணிவண்ணன் எஸ் கதிர்வேல் எஸ் அசோக் குமார் வடலூர் நகர அமைப்பு குழு உறுப்பினர்கள் கே சீனிவாசன் டி ஆர் ராமலிங்கம் ஆர் முருகையன் ஆர் மணி எம் மீனாட்சி நாதன் குறிஞ்சிப்பாடி நகர அமைப்பு குழு உறுப்பினர்கள் எம் கண்ணன்
பி மணிகண்டன் எஸ் குமரவேல் மற்றும் கிளை செயலாளர்கள் வர்க்க வெகுஜன அரங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி