சிதம்பரம் பகுதியில் பரவலாக மழை

68பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே காணப்பட்டதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையினால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி