குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் - சிபிசிஐடி வழக்குப்பதிவு

63பார்த்தது
குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் - சிபிசிஐடி வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் சங்கன்விடுதி அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை என முடிவுகளில் தெரியவந்தது. இந்த நிலையில், சண்முகம் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதனிடையே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி