செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

69312பார்த்தது
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 21வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி