‘பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளைக் கண்காணிக்க குழு’

58பார்த்தது
‘பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளைக் கண்காணிக்க குழு’
முறைகேடுகளைக் களையும் நோக்கத்திலும், பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள், இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள், மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி